×

இரு சக்கர வாகனம் திருடிய வாலிபர் கைது

தஞ்சாவூர், ஆக.19: தஞ்சாவூர் கீழவாசல் சம்சூன் நகரை சேர்ந்த முகமது ரசூல் (24). இவர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பர்மாபஜார் செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஜூலை மாதம் 24ம்தேதி வேலையை முடித்துக்கொண்டு இரவு அவரது வீட்டின் எதிரே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். காலையில் பார்த்ததும் இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முகமது ரசூலின் இருசக்கர வாகனத்தை ஒருவர் அப்பகுதியில் ஓட்டி செல்வதை பார்த்து உள்ளார். உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார் அங்கு வந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடித்தனர். இதில் அவர் அய்யம்பேட்டையை சேர்ந்த சூர்யா (26) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து இரு சக்கர வாகனத்தை மீட்டு முகமது ரசூலிடம் போலீசார் ஒப்படைத்தனர். சூர்யாவை போலீசார் கைது செய்து மீது விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இரு சக்கர வாகனம் திருடிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Mohammad Rasool ,Samsun City ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் குருதயாள் சர்மா அருகே...